பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது: பாகிஸ்தானில் ராணுவம் அதிரடி
இந்நிலையில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பினர் பதுங்கி இருப்பதாகவும், மிகப்பெரிய தாக்குதலை நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டுவதாகவும் உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெஹ்லம் நகரில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த அல்-கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் அமீன் முகமது உல் ஹக் சாம் கான் (64) கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமீன் முகமது ஏற்கனவே ஐநா.சபையின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாகவும் இவர் செயல்பட்டார். எனவே பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ராணுவத்தின் இந்த நடவடிக்கை முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.