தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் ஆளுநருக்கு கெடு விதிக்க சட்டத்தில் இடமில்லை: தலைமை நீதிபதி கவாய் விளக்கம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்யாகாந்த் இன்று பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்றுடன் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை.

Advertisement

அப்படியிருக்கையில், சட்டத்தில் இல்லாத ஒன்றை எப்படி செய்ய முடியும். எனவே நாங்கள் ஆளுநர்களுக்கான காலக்கெடுவை தளர்த்தியதோடு மட்டுமில்லாமல், மசோதா மீது முடிவெடுக்காமல் நீண்டகாலம் கிடப்பில் போட முடியாது என்று கூறி சமநிலைப்படுத்தி உள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில் ஆளுநர் மசோதா மீது முடிவெடுப்பதை தடுக்க பல காரணங்கள் இருக்கலாம்.

அரசியலமைப்பு என்பது அதிகாரங்களை பிரிக்கும் கொள்கையைின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் சட்டமன்றங்களிடமே உள்ளது. நீதித்துறை தலையிட முடியாது.  பொதுமக்களின் நம்பிக்கையை காப்பதில் நீதித்துறைக்கு சுதந்திரம் அவசியம்.

இதை உறுதி செய்ய நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு நீடிக்க வேண்டும். இந்த காலத்தில் ஒரு நீதிபதி அரசுக்கு எதிராக உத்தரவிட்டால் மட்டுமே அவர் சுதந்திரமானவர் என நினைக்கிறார். இது தவறான அணுகுமுறை. வழக்கு தொடுப்பவர் அரசா, சாமானியனா என்பதை பார்க்காமல் ஆதாரங்கள், சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News