தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: அடுத்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலம் நிர்ணயம் செய்த தீர்ப்பை தொடர்ந்து குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விக்கு அடுத்தவாரம் உச்சநீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு வழங்குகிறது. தமிழ்நாடு அரசு, தொடர்ந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வாங்கிய உச்சநீதிமன்றம் மூன்று மாதத்தில் ஆளுநர், குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் மூலம் உச்சநீதிமன்றத்தில் 14 கேள்விகளை எழுப்பியது. அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம் அவசியமானது.

Advertisement

ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் விரும்பும் வரை மசோதாக்களை கையில் வைத்திருக்க முடியாது. இது அரசியல் சாசன நடை முறைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் இதற்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தது. கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேடி விசாரணையை முடித்து உத்தரவு ஒத்திவைத்து. இந்த நிலையில், வரும் 23ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு பெறுவதால் அடுத்த வாரம் உத்தரவை வெளியிட உச்சநீதிமன்றம் தயாராகி வருகிறது. இந்த வழக்கு முந்தைய தீர்ப்பை சீராய்வு செய்வதற்கானது அல்ல என்று உச்சநீதிமன்றம் விசாரணையின் போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement