தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரவு நேரத்தில் பைக் ரேஸ் தடுக்க சாலையில் தடுப்பு வேலி அமைப்பு: போலீசாரின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு

Advertisement

அண்ணாநகர்: சென்னையில் இரவு நேரத்தில் பைக் ரேஸ் நடப்பதை தடுக்க சாலையில் தடுப்பு வேலி அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்கான போக்குவரத்து போலீசாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இவற்றை போக்குவரத்து போலீசார் தடுத்து வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே இரவு நேரத்தில் இளைஞர்கள், பைக் ரேசில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதுடன் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். இதனால் பைக் ரேஸ் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கோயம்பேடு நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக இளைஞர்கள், பைக் ரேசில் ஈடுபட்டனர்.

இவ்வாறு ரேசில் ஈடுபடும் நபர்கள், தங்களது விவரங்களை போலீசார் தெரிந்து கொள்ளாமல் இருக்க நம்பர் பிளேட்டுகளில் துணி வைத்து மறைத்தும் நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்தும் பைக் ரேசில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கோயம்பேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எஸ்.பி.சுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்துவந்து பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஈடுபடுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகன பதிவு எண்களை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பைக் ரேஸ் தடுக்க இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சாலையில் தடுப்பு அமைத்து உள்ளனர். இதன்காரணமாக இரவு நேரங்களில் இளைஞர்கள் ரேஸ் ரேசில் ஈடுபடுவது தொடர்ந்து குறைந்து வருகிறது.

Advertisement