தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரல்வாய்மொழியில் பைக் -கார் நேருக்கு நேர் மோதல் சமையல் தொழிலாளி பரிதாப சாவு

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழியில் கார்- பைக் நேருக்கு நேர் மோதியதில் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் தாணப்பன்(27). சமையல் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை தாணப்பன் இருச்சக்கர வாகனத்தில் ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் முத்துநகர் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி இந்திரா கூட்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்த குமார் என்பவர் காரில் வேகமாக வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக காரும் தாணப்பன் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது.இதில் பைக் நொறுங்கியது. தாணப்பன் தூக்கி வீசப்பட்டார். தலை, உடல் ஆகிய பகுதிகளில் தாணப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தாணப்பன், காரை ஓட்டி வந்த குமார் ஆகிய 2 பேரையும் மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாணப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement