தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக் சாகசம்: 5 இளைஞர்கள் சிக்கினர்

Advertisement

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த 5 இளைஞர்கள் பைக்கில் சாகசம் செய்து ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துவது, ஆபாச செய்கை செய்வது என்று அட்டூழியம் செய்து வந்தனர். இந்த கும்பல் ஆபத்தான வகையில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வீடியோவை பார்த்த பலரும் கண்டித்தனர். இந்த விஷயம் களியக்காவிளை போலீசாரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து நேற்று களியக்காவிளைக்கு உட்பட்ட படந்தாலுமூடு சோதனை சாவடி அருகே ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்த 5 இளைஞர்களை போலீசார் அடையாளம் கண்டு மடக்கி பிடித்தனர். உடனே 5 பேரையும் கைது செய்த போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், சஞ்சய் (21), ஜெபின் (21), நர்சிங் கல்லூரி மாணவர் ஜோயல் (21), மற்றும் 18 வயது கல்லூரி மாணவர், 17 வயது கல்லூரி மாணவர் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இளைஞர்கள் வந்த 2 பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீசார் 5 பேரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கண்டித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement