தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சித்து கோஷம் எழுப்பிய ஆர்ஜேடி எம்எல்சி மேலவையில் இருந்து நீக்கம்

Advertisement

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சித்து கோஷம் போட்டதற்காக ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்சி சுனில் குமார் சிங் மேலவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பீகார் சட்ட மேலவையில் கடந்த பிப்ரவரியில் நடந்த விவாதத்தின் போது,ஆளும் கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது, ஆர்ஜேடி எம்எல்சி சுனில் குமார் சிங் முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து கோஷம் போட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க நெறிமுறை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்றுமுன்தினம் தனது அறிக்கையை மேலவையின் தற்காலிக தலைவர் அவதேஷ் நாராயண் சிங்கிடம் சமர்ப்பித்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த மேலவை கூட்டத்தில் சுனில் குமார் சிங்கை நீக்குவதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்ஜேடி எம்எல்சி முகமது கரி சோயிப்பை அவையில் இருந்து 2 நாள் சஸ்பெண்ட் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெறிமுறை குழு விசாரணையின் போது முகமது சோயிப் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால், சுனில் குமார் சிங் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி எம்எல்சியான ராப்ரி தேவி கூறுகையில்,‘‘ சுனில் குமாரை மேலவையில் இருந்து நீக்கி ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்றின் இருண்ட அத்தியாயம்’’ என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News