தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் பீகார் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரினர். இதனால் அமளி ஏற்பட்டதால் மதியம் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு பிறகு மீண்டும் அவை கூடிய போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எம்பிக்கள் கோஷமிட்டனர்.

அமளிக்கிடையே கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2025 எடுத்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டே அவையின் மைய பகுதிக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் வந்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சிறிது நேரம் பேச மாநிலங்களவை துணை தலைவர் அனுமதி அளித்தார். அவர் பேசுகையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் எதையும் செய்யும் என்றார்.

அப்போது அவை முனைவர் ஜே.பி. நட்டா எழுந்து மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார். அப்போது அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அமளிக்கிடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால் அலுவல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.

Related News