தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 47 லட்சம் பேர் நீக்கம்

பாட்னா: பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.  அதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு பட்டியலில் நீக்கப்பட்டது. இதையடுத்து வரைவு பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

Advertisement

திருத்த நடைமுறைகள் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.42 கோடியாக உள்ளது. வரைவு பட்டியல் திருத்த காலத்தில் விடுபட்ட 21.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டதாகவும், 3.66 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலில் 47 லட்சம் பேரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News