தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

17ம் தேதி பீகாரில் வாக்கு அதிகார யாத்திரை தொடக்கம் ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்குகள் திருட்டுக்கு எதிராக வரும் 17ம் தேதி பீகாரில் வாக்கு அதிகார யாத்திரை தொடங்குகிறது. காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: மிக பயங்கரமான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிரான மக்கள் இயக்கம் வரும் 17ம் தேதி பீகாரில் உள்ள சசாராமில் தொடங்குகிறது.

இதில் ராகுல் காந்தி,ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநிலம் முழுவதும் நடத்தப்படும் யாத்திரை வரும் செப்டம்பர் 1ம் தேதி பாட்னாவில் நிறைவடையும்.இதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய மாணவர் அமைப்பின்(என்எஸ்யுஐ) பொறுப்பாளர் கன்னையா குமார்,‘‘சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும். வரும் 22ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை வாக்கு திருடர்களே பதவிகளை ராஜினாமா செய்யுங்கள் என வலியுறுத்தி அனைத்து மாநில தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும். அதை தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்’’ என்றார்.