தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் ஒரே வீட்டில் முழு கிராமமும் வசிக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது ராகுல் புதிய குற்றச்சாட்டு

பாட்னா: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை நடத்தி வருகின்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பதிவை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில், ‘‘தேர்தல் ஆணையத்தின் மாயாஜாலத்தை பாருங்கள். ஒரு முழு கிராமமும் ஒரே வீட்டில் குடியேறி உள்ளது.

Advertisement

பராசட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கயா மாவட்டத்தில் நிதானி கிராமத்தில் ஒரு வாக்குசாவடியின் மொத்தமுள்ள 947 வாக்காளர்களும் ஆறாவது எண் வீட்டிலேயே வசிப்பவர்கள் என்று காட்டப்பட்டுள்ளது. இது ஒரு கிராமத்தை பற்றியது. மாநில மற்றும் தேசிய அளவில் நடக்கும் முறைகேடுகளின் அளவை நம்மால் கற்பனை செய்து பார்க்க மட்டுமே முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பீகார் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் கயா மாவட்ட கலெக்டரின் எக்ஸ் தள பதிவில் வெளியிடப்பட்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இதில்‘‘கிராமங்கள் அல்லது குடிசைப் பகுதிகளில் வீடுகளில் உண்மையான வரிசை எண்கள் இல்லாத இடங்களில் கற்பனையான வீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை சேர்க்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக இது செய்யப்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News