தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பீகாரில் மீண்டும் சர்ச்சை டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்

சமஸ்திப்பூர்: பீகாரின் சமஸ்திபூர் மாவட்டம்,ஹசன்பூர் என்ற கிராமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி ஆன்லைனில் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர் டொனால்ட் டிரம்ப் என்று குறிப்பிட்டு புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. அவருடைய பெற்றோர் பெயர்களில் தந்தை பெடரிக் கிறிஸ்ட் டிரம்ப் மற்றும் தாய் மேரி ஆனி மேக் லியோட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுதாரித்து கொண்ட மாவட்ட நிர்வாகம் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்று கோரி குறும்பில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தின் நம்பிக்கையையும், நேர்மையையும் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்டு இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளதாக விளக்கம் அளித்து உள்ளனர்.சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். சமீபத்தில் பாட்னாவில் நாய் பாபு என்ற பெயரில் நாய்க்கு இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.கிழக்கு சம்பரானில் போஜ்புரி நடிகை சோனாலிகா டிராக்டர் பெயரில் இருப்பிட சான்றிதழ் கோரி ஒருவர் விண்ணப்பித்துள்ளார். பீகாரில் இருப்பிட சான்றிதழ் கோரி வினோதமான முறையில் விண்ணப்பம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா மாநில அரசை விமர்சித்துள்ளார்.

Related News