தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் 65 கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து 4 நாளாக நகர முடியாமல் தவிக்கும் வாகனங்கள்: லாரி ஓட்டுநர்கள் கதறல்; அதிகாரிகள் அலட்சியம்

புதுடெல்லி: பீகாரில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஓட்டுநர்கள் நான்காவது நாளாக கடும் அவதியடைந்து வருகின்றனர். பீகாரின் ரோக்தாஸ் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த பெரும் மழையால், டெல்லி-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எண் 19-ல் ஆறு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மாற்றுப்பாதைகள் மற்றும் சேவைச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

Advertisement

இதனால், சாலைகள் எங்கும் பள்ளங்கள் உருவாகி, மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசல் தற்போது ரோக்தாஸ் முதல் அவுரங்காபாத் வரை சுமார் 65 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டுள்ளது. வாகனங்கள் 24 மணி நேரத்தில் வெறும் 5 கிலோமீட்டர் தூரம் மட்டுமே நகர முடிவதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நெரிசலில் சிக்கியுள்ள லாரி ஓட்டுநர் பிரவீன் சிங் கூறும்போது, ‘கடந்த 30 மணி நேரத்தில் நாங்கள் வெறும் 7 கிலோமீட்டர் மட்டுமே பயணித்துள்ளோம். சுங்கக் கட்டணம், சாலை வரி என அனைத்தையும் செலுத்தியும் பல மணி நேரமாக நெரிசலில் சிக்கித் தவிக்கிறோம். தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளோ, உள்ளூர் நிர்வாகத்தினரோ யாரும் இங்கு வந்து பார்க்கவில்லை’ என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.

மற்றொரு ஓட்டுநரான சஞ்சய் சிங், ‘இரண்டு நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளோம். பசி, தாகத்தால் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம்’ என்றார். விரைவில் கெட்டுப்போகும் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள், சரக்குகள் வீணாகிவிடுமோ என்ற அச்சத்திலும், ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசர ஊர்திகள் செல்ல முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் ரஞ்சித் வர்மாவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 

Advertisement

Related News