தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் மின் கொள்முதல் முறைகேடு அதானியால் ரூ.60 ஆயிரம் கோடி ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பீகாரில் மின் கொள்முதலில் ரூ.60 ஆயிரம் கோடி ஊழலை முன்னாள் ஒன்றிய அமைச்சர் வெளிப்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,’ ஆர்.கே. சிங் 2017 முதல் 2024 வரை ஒன்றிய மின்சார அமைச்சராகப் பணியாற்றினார். பிரதமர் பீகாரில் அதானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததால், ரூ.60,000 கோடி ஊழல் நடந்ததை அவர் இப்போது அம்பலப்படுத்துகிறார். இதனால் பீகாரில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6 என்று உயர்த்தப்பட்ட விலையில் வாங்கப்பட்டது.

Advertisement

ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து மோடியின் கூட்டாளிகளுக்கு பணம் முழுமையாகச் செல்வதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு இது. இந்தத் தேர்தல்களில் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை முற்றிலும் நிராகரிக்கிறார்கள். ஏனென்றால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட முழு அமைப்பும் அதானி மற்றும் அவர் போன்றவர்களுக்கு ஒரு கொள்ளை இயந்திரம் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த ஊழல் அம்பலப்படுத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’ என்றார். இதுகுறித்து ஒன்றிய அரசு சார்பிலோ அல்லது பா.ஜவில் இருந்தோ, அதானியிடம் இருந்தோ எந்தவித பதிலும் வரவில்லை.

Advertisement