தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் 12,000 புதிய வாக்குச்சாவடிகள்: மாநில அரசு அறிவிப்பு

பாட்னா: பீகாரில் 12,000க்கும் மேற்பட்ட புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பீகாரில் தற்போது நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
Advertisement

சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைய வரும் 25ம் தேதி வரை காலக்கெடு உள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தின்கீழ் இதுவரை 95.92 சதவீத வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், இறந்தவர்கள் உள்பட குறிப்பிட்ட முகவரிகளில் அடையாளம் காணப்படாதவர்களின் எண்ணிக்கை 41.64 லட்சத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகாரில் 12,000க்கும் மேற்பட்ட புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பீகார் மாநில தேர்தல் துறை வௌியிட்டுள்ள அறிக்கையில், “புதிதாக 12,817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 78,895ல் இருந்து 90,712ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய வாக்குச்சாவடிகளில் 12,479 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ள அதே கட்டிடம் அல்லது வளாகத்திலும், மீதமுள்ள 388 வாக்குச்சாவடிகள் தனியாகவும் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News