தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரிலும், ஒடிசாவிலும் தமிழர்களுக்கு எதிராக அவதூறு பேசும் மோடி: சீமான் குற்றச்சாட்டு

திருச்சி: பீகாரிலும், ஒடிசாவிலும் பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிராக அவதூறாக பேசி வருவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தவர் அதிகம் உள்ளனர். தமிழ்நாடு இன்னொரு பீகாராக மாறி வருகிறது. பீகாரிலும், ஒடிசாவிலும் பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிராக அவதூறாக பேசி வருகிறார்.

Advertisement

தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு இடையே போட்டியில்லை. கருத்தியல் போட்டி தான் நிலவுகிறது. ஒருவர் இரு மொழி கொள்கை என்கிறார். மற்றொருவர் மும்மொழி கொள்கை என்கிறார். ஆனால் நாங்கள் ஒரே கொள்கை. தமிழ் மொழி கொள்கை மட்டுமே கொண்டுள்ளோம். கோவை மாணவி கூட்டு பலாத்காரம் மிகப்பெரிய தலைகுனிவு. இந்த சம்பவம் சட்டங்கள் கடுமையாக இல்லை என்பதை தான் உணர்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘தவழ்ந்துதான் முதல்வரானார்’ உண்மையை சொன்னா அவதூறா?

‘எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து முதல்வரானார் என்பது அவதூறல்ல. அது நடந்த உண்மை. சசிகலா காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிசாமி பதவி பெற்றார். இப்படி இருக்கும்போது இவர்களில் யாருக்காவது துரோகம், சுயமரியாதை, சமூகநீதி குறித்து பேசுவதற்கு தகுதி உண்டா என்பதை யோசித்து பாருங்கள்’ என்று சீமான் தெரிவித்தார்.

Advertisement