தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் தேர்தலை கண்காணிக்க செல்லும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்

சென்னை: பீகார் தேர்தலை கண்காணிக்க தமிழகத்தில் இருந்து 5 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் இன்று முதல் தமிழகத்தில் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மதுமதி, பீகாரில் உள்ள தாராரி சட்டப்பேரவை தொகுதிக்கும், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளர் சஜ்ஜன் சிங் சவான், ராஜ்கீர் தொகுதிக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சரவணவேல்ராஜ், தாரவுளி தொகுதிக்கும், மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர் சமயமூர்த்தி, கயா டவுன் தொகுதிக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், நிர்மாளி தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இவர்களது பணிகள் வேறு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி கால்நடைத்துறைச் செயலாளர் சுப்பையனுக்கு, மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை செயலாளராக உள்ள ஜெயஸ்ரீமுரளீதரனுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், கைத்தறித்துறை செயலாளர் அமுதவள்ளிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையும், தொழிலாளர் நலத்துறை செயலாளர் வீரராகவ ராவுக்கு, திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.

Advertisement