தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் தேர்தல் முடிவுகள்; தமிழகத்தில் எதிரொலிக்காது: டிடிவி தினகரன்

சென்னை: சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அக்கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று அமமுக கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது.

Advertisement

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி செய்கிறது, இந்த எஸ் ஐ ஆர் பணிகளை தமிழகத்தில் உள்ள அலுவலர்கள் தான் மேற்கொண்டு வருகிறார்கள் எனவே அனைத்து கட்சி ஒன்றிணைந்து விழிப்புடன் மேற்கொள்ளும்போது தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும். பழனிசாமியை தலைமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தான் அமமுக தொடங்கப்பட்டது, மேலும் நாங்கள் கட்சியை தொடங்கியது பழனிசாமி துரோகத்திற்கு எதிராகத்தான்.

அவர் தலைமையை ஏற்று கொண்டு செல்ல மாட்டோம், அதனை நாங்கள் விரும்பவில்லை. கூட்டணிக்கு வர வேண்டும் என சில கட்சிகள் எங்களை அழைத்து கொண்டு இருக்கிறது. சிலர் தவெக -க்கு செல்வார் என்று கூறுகிறார்கள், அது உண்மை இல்லை. டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் கூட்டணி இறுதிசெய்யப்படும். அமமுக- வை தவிர்த்துவிட்டு எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது. 2026ம் ஆண்டு தேர்தல் ஆளும் கட்சிக்கும் , தவெக கூட்டணிக்கும் தான் போட்டியாக இருக்கும்.இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.

Advertisement