தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் தேர்தல் முடிவுகள்; மனப்பால் குடிக்கலாம் ஆனால் நடக்காது: வைகோ

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி சரிவும் பெற்று இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், வெற்றி பெற்றவர்களை பாராட்டுவது தான், அரசியலில் ஆரோக்கியமானது. நிதிஷ்குமார் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர். நாடாளுமன்ற விவாதத்தின் போது, இந்த விவாதத்தில் ஹீரோ வைகோ என்று, என்னை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

பீகாரின் நிலை, இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த தேர்தல் முடிவுகளை பார்த்து, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கின்ற கட்சிகள், நாமும் வெற்றி பெற்று விடலாம் என மனப்பால் குடிக்கலாம், கனவு கோட்டைகளை கட்டலாம். அது ஒன்றும் நடக்காது.

தமிழகத்தில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி வரும், எனது சகோதரர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி தான், மிகப்பெரிய வெற்றியை பெறும். தனி மெஜாரிட்டி திமுகவிற்கு கிடைக்கும். இதில் எந்த மாற்றுக்கருத்தும், ஐயமும் எங்களுக்கு இல்லை. ராகுல் காந்தி, சக்தியை மீறி மக்களை சந்தித்தார். அவரின் கடமையை செய்தார். ராகுல் காந்தி இந்த தோல்விக்கு எல்லாம், சோர்வு அடைபவர் இல்லை. இன்னும் சுறுசுறுப்பாக அவர் வேலை செய்வார். எஸ்ஐஆர் மிகப்பெரிய பிராடு வேலை.

Advertisement