தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் தேர்தல் பிரசாரத்தில் ஏஐ கருவிகளை தவறாக பயன்படுத்த கூடாது: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: பீகார் தேர்தல் பிரசாரத்தில் ஏஐ கருவிகளை தவறாக பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்ட அறிவிப்பில், “பீகார் தேர்தல் பிரசாரத்தில் தவறான தகவல்களை பரப்ப, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த கூடாது. அரசியல் கட்சிகள், முக்கிய பிரசாரகர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் சமூக ஊடக தளம் வாயிலாகவோ அல்லது விளம்பர வடிவிலோ பிரசாரத்துக்காக பயன்படுத்தும் காட்சிகளில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டது அல்லது செயற்கை உள்ளடக்கம் என்ற குறியீடுகளை வௌியிட வேண்டும். தேர்தல் செயல்பாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த சமூக வலைதளங்களில் தகவல்களை சிதைக்கும் அல்லது தவறான தகவல்களை பரப்பும் ஆழமான போலிகளை(டீப் ஃபேக்) உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்த கூடாது. தேர்தல் சூழல் சீர்குலைவதை தடுக்க அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பிரசாரகர்களின் சமூக ஊடக கணக்குகள் கடுமையாக கண்காணிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News