தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் தேர்தல் பிரசாரத்தில் வன்முறை பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர் சுட்டுக்கொலை: நிதிஷ்கட்சியினர் வெறிச்செயல்; வாகனங்கள் மீதும் தாக்குதல்

பாட்னா: பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி தனித்தனியாக போட்டியிடுகின்றன. அதே போல் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனித்து போட்டியிடுகிறார். அவரது ஜன்சுராஜ் கட்சி சார்பில் பாட்னா மொகாமா தொகுதியில் பியூஷ் பிரியதர்ஷி நிறுத்தப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜேடியுவின் பலம் வாய்ந்த அனந்த் சிங், இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ஜேடி வீணா தேவி போட்டியிடுகிறார்கள். மொகாமாவில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நவம்பர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷிக்கு ஆதரவாக கட்சி நிர்வாகி துலர் சந்த்யாதவ் பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement

தால் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதில் அவர் பரிதாபமாக பலியானார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷியுடன் வந்த வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. சுட்டுக்கொல்லபட்ட துலர் சந்த் யாதவ் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் அனந்த்சிங்கை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டவர் ஆவார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த தேர்தலில் இருந்தே முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Advertisement

Related News