தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் பாஜ கூட்டணியின் வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் வாக்குகள் நீக்கப்படும்: அதிமுக ஒப்புதல்

திண்டுக்கல்: ‘பீகாரில் பாஜ கூட்டணியின் வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான். தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் வாக்குகள் நீக்கப்படும்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் வஉசி 89வது குருபூஜையை முன்னிட்டு, நேற்று அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் தேர்தல் போல நூற்றுக்கு நூறு தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறும். பீகாரின் நிதிஷ்குமார் போல, 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு முதலமைச்சராக வருவார். எஸ்ஐஆரை எதிர்க்க ஒன்றுமில்லை. 5 ஆண்டுகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

Advertisement

நமது சுதந்திரம் நமது உரிமை. இதனால் எஸ்.ஐ.ஆரில் எந்த பாதிப்பும் இல்லை. ஏன் இதை தடுக்கிறார்கள் தெரியவில்லை. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் எவ்வாறு செய்வார்கள்? அரசு ஊழியர்கள் செய்வது நூற்றுக்கு நூறு சரி. எஸ்ஐஆரால் தமிழகத்தில் ஒரு கோடி வாக்குகள் குறையும் என சீமான் சொல்கிறார். அவர் கம்மியாக சொல்கிறார், அதைவிட அதிகமான வாக்குகள் குறையும். திண்டுக்கல் தொகுதியில் 40 ஆயிரம் முதல் 50,000 வாக்குகள் பாதிக்கும். இரட்டை ஒட்டுகள், இறந்தவர்களை கணக்கெடுத்தால் கரெக்டா வந்துவிடும்.

பீகாரில் பாஜ கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான். எஸ்ஐஆர் எதிர்ப்பு போராட்டம் குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement