தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியில்லை

பாட்னா: பீகார் பேரவை தேர்தலையொட்டி, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி இருந்தார். பேரவை தேர்தலில் தன் சொந்த தொகுதியான கர்கஹார் அல்லது ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவின் கோட்டையாக கருதப்படும் ராகோபூர் தொகுதியில் போட்டியிட போவதாக முன்பு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ராகோபூர் தொகுதியில் ஜன் சுராஜ் வேட்பாளராக சஞ்சல் சிங் என்பவரை பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், “பேரவை தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிட்டால் பேரவை தேர்தல் பணிகள் பாதிக்கப்படும். எனவே, கட்சியின் நன்மைக்காக கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்த உள்ளேன்” என்று கூறினார்.

Advertisement

* தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட கிஷோர் - ஆர்ஜேடி, ஜேடியு விமர்சனம்

ராஷ்ட்ரிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் மிருத்யுஞ்செய் திவாரி கூறுகையில், “ போர்க்களத்துக்கு போகும் முன்பே ஜன் சுராஜ் கட்சி தோல்வியை ஏற்று கொண்டது” என விமர்சித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில், “தேர்தலுக்கு முன் மக்கள் பிரச்னைகளை புரிந்து கொள்ள பாதயாத்திரை சென்ற பிரசாந்த் கிஷோர், இப்போது தேர்தல் போருக்கு போகும் முன்பே ஓடி விட்டார். அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கு பெரும் அவமானம்” என விமர்சித்துள்ளார்.

Advertisement

Related News