தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR நடத்தப்படும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

டெல்லி: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், உ.பி, ம.பி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. SIR பணிகள் முடிந்து 2026 பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் பேட்டியளித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது;

Advertisement

முதற்கட்டமாக பீகார் மாநிலத்தில் வெற்றிகரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று முடிந்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக முடிந்தது; எந்த மேல்முறையீடும் இல்லை. 2-ம் கட்டமாக 12 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடக்க உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம். தகுதியான வாக்காளர்கள் விடுபடக் கூடாது என்பதே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம்.

பீகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று உள்ளது. கடைசி திறப்பு தீவிர திருத்தம் 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2002 - 2004 ஆண்டுகளில் நடைபெற்றது. பல இடங்களில் வாக்காளர் பெயர் இடம்பெறுவது, மறைந்த வாக்காளர் பெயர் இடம்பெற்ற காரணங்களுக்காக எஸ்.ஐ.ஆர். இறுதி வாக்காளர் பட்டியலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் முதல் முறையிட்டை செய்யலாம். ஆட்சியர் நிராகரித்தால் முடிவுக்கு எதிராக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் 2-வது முறையீட்டை மேற்கொள்ளலாம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திவீர திருத்தத்தின் கீழ் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பதிவு அதிகாரி நியமிக்கப்படுவார். ஒவ்வொரு தாலுகாவுக்கும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரி நியமிக்கப்படுவார்கள். 2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் எந்த ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. வாக்காளர் பட்டியலில் பிரச்சனை ஏதேனும் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம். தற்போதைய தேதியில் உள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Advertisement

Related News