தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை :ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!!

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப்போவது இல்லை என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. 14-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த நிலையில், ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “பீகார் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை. கட்சி நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது, அதற்கு நான் கட்டுப்பட்டுள்ளேன்.

Advertisement

ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக வேறு ஒரு வேட்பாளரை அறிவித்துள்ளோம். என் போட்டி, கட்சியின் அமைப்பு செயல்பாடுகளில் என் கவனத்தைத் திசைதிருப்பும் என்பதால், இந்த முடிவு சரியானது. இம்முடிவு என் அரசியல் பயணத்தின் நன்மைக்காக எடுக்கப்பட்டது. இருப்பினும், ஜன் சுராஜ் கட்சி மூலம் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வேன்.

முதலமைச்சர் நிதிஷ் குமார் கட்சியின் எதிர்காலம் மோசமடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெளியேறும் பாதையில் உள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக வரமாட்டார். ஜன் சுராஜ் கட்சி, பீகாரின் 243 தொகுதிகளில் சுமார் 150 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்," என்று கூறினார்.

Advertisement