தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முடிவு செய்துவிட்டனர்: தேஜஸ்வி யாதவ்!

பாட்னா: பீகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முடிவு செய்து விட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட அனைத்து அரசு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Advertisement

இந்த நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ். பீகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முடிவு செய்துவிட்டதாக தெரிவித்தார். நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழலும், குற்றச்செயல்களை தலைவிரித்து ஆடுவதாகவும். வேலையின்மை அதிகரித்து இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

பீகாரில் செயலிழந்துவிட்ட டபுள் இன்ஜின் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தேஜஸ்வி யாதவ் பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பெண்கள் மேம்பாட்டிற்கான ஜீவிகா சுய உதவி குழு திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பெண்களும் ரூ.30ஆயிரம் ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் வங்கிகளில் அவர்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Advertisement

Related News