தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் முடிவு..!!

பாட்னா: பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஐஎம்‌ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, பீகாரில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆர்.ஜே.டி. கட்சிக்கு 3 முறை கடிதம் எழுதியபோதிலும், அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்று அவர் கூறினார். இந்நிலையில், பீகாரில் ‘சீமாஞ்சல் நியாய யாத்திரை’ என்ற பெயரில் 3 நாள் பிரசாரத்தை ஒவைசி நேற்று தொடங்கினார். இதனால் ஒவைசி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஒவைசி கட்சி 25 இடங்களில் தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. ஒவைசி கட்சியை சேர்த்தால், வரும் தேர்தலை இந்து - முஸ்லிம்கள் இடையிலான போட்டியாக பாஜக மாற்றிவிட வாய்ப்பு உள்ளதால், கூட்டணியில் சேர்க்க எங்களுக்கு தயக்கம் இருப்பதாக இந்தியா கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement