தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த முதல்கட்ட தேர்தலில் சுமார் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. 5 வாக்குச்சாவடி மையங்களில் மாலை 5 மணிவரை மட்டுமே வாக்கு செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் குறைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அனைத்து பகுதிகளிலும், காலை விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்றது. குறிப்பாக முதல் 2 மணி நேரத்தில் அதிகபட்ச வாக்குபதிவு நடைபெற்றது. மாலை நேரங்களில் வாக்குப்பதிவு குறைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.13 % வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

குளிர்காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் விரைவாக சூரிய அஸ்தமனம் ஆகும் என்பதால் பல இடங்களில் மக்கள் அதிக அளவில் மாலை நேரங்களில் வரிசையில் நின்று வாக்களிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து EVM மற்றும் vvpat இயந்திரங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசெல்லும் பணி தொடங்கப்படவுள்ளது.

Advertisement

Related News