தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதசாரிகள் செல்லும் பாதையில் சைக்கிள் ஓட்டினால் ரூ.1.3 லட்சம் அபராதம்; 3 மாதம் சிறை: சிங்கப்பூர் அரசு அதிரடி

Advertisement

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாதசாரிகள் செல்லும் பாதையில் சைக்கிள் ஓட்டினால் ரூ.1.3 லட்சம் அபராதம்; 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கடுமையான சட்டங்களுக்கும், முறையான நகர திட்டமிடலுக்கும் பெயர் பெற்ற நாடான சிங்கப்பூரில், சமீப ஆண்டுகளாக சைக்கிள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற தனிநபர் பயண சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது. இந்த வாகனங்கள் போக்குவரத்திற்கு வசதியாக இருந்தாலும், மறுபுறம் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் பெரும் சவாலை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்ட சிங்கப்பூர் அரசு, பாதசாரிகளுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கும் வகையில், சைக்கிள் செல்வதற்காக பிரத்யேக பாதைகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அடுத்தகட்டமாக, பாதசாரிகளின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்யும் நோக்கில், சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் தற்போது அதிரடியான புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஜூலை 1ம் தேதி (நேற்று) முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தின்படி, பாதசாரிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட நடைபாதைகளில் சைக்கிள் அல்லது மற்ற தனிநபர் பயண சாதனங்களை ஓட்டுவது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு 2,000 சிங்கப்பூர் டாலர்கள் (சுமார் 1.30 லட்சம் ரூபாய்) வரை அபராதமோ, 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

இந்த நடைபாதைகள் தெளிவான சின்னங்களுடன் குறிக்கப்பட்டுள்ளன என்றும், அவசரமாகவோ அல்லது அஜாக்கிரதையாகவோ வாகனம் ஓட்டுபவர்கள் மீது எந்தவித சகிப்புத்தன்மையும் காட்டப்படாது என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. எனினும், நடக்க சிரமப்படுபவர்கள் பயன்படுத்தும் பிரத்யேக உதவி சாதனங்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News