தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூதப்பாண்டி அருகே அம்மன் கோயிலில் திருட்டு முயற்சி: முகமூடி அணிந்து வந்த 2 பேருக்கு வலை

Advertisement

பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே அம்மன் கோயிலில் திருட முயன்ற முகமூடி திருடர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பூதப்பாண்டி அருகே ஈசானிமங்கலம் கிராமத்தில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான செண்பக நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று மாலை சமுதாய மக்கள் கூட்டம் நடத்த கோயிலுக்கு சென்றனர். அப்போது கோயிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக கோயிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு விளக்குகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறி கிடந்தன. கோயிலுக்கு சொந்தமான ஆவணங்கள் அடங்கிய லாக்கர் பெட்டி இருந்த இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்தில் கிடந்தது.

அருகில் ெசன்று பார்த்தபோது அதன் பூட்டு உடைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பக்தர்கள் கோயில் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி மேராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்து லாக்கர் பெட்டியை உடைக்க முயல்வதும், லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்து திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஊர் தலைவர் ஹரிகுமார் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி அணிந்து கொண்டு கோயிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட முயன்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement