தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பவானிசாகர் நகைக்கடையில் திருடிய இளம்பெண் கைது

*சிசிடிவி காட்சி மூலம் சிக்கினார்

சத்தியமங்கலம் : பவானிசாகரில் உள்ள நகைக்கடையில் நகை திருடிய இளம்பெண் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கண்டறிந்து அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பஸ் நிலையம் அருகே மார்க்கெட் சதுக்கத்தில் பாலாஜி என்பவர் ஜெயலட்சுமி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மே 25ஆம் தேதி கைக்குழந்தையுடன் இளம் பெண் வந்தார். நகை வாங்குவதுவோல் நடித்து கவரிங்க நகையை வைத்து விட்டு 2 பவுன் நகையை திருடிச்சென்றார்.

கடந்த 3 நாளுக்கு முன்பு நகைளை சோதனை செய்தபோது கவரிங் நகை இருந்ததும் இதில் யாரோ கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சியை சோதனை செய்தபோது சம்பவத்தன்று கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் நகையை திருடி அதற்கு பதிலாக கவரிங் நகையை வைத்த காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து பவானி சாகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

தீவிர விசாரணையில் நகையை திருடியது பவானி சாகர் அடுத்துள்ள உத்தண்டியூரை சேர்ந்த ராஜசேகரின் மனைவி ராதிகா (30) என்பவர் என்று தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருடிய நகையை அணிந்திருந்தார். நகையை பறிமுதல் செய்த போலீசார் ராதிகாவை கைது செய்தனர்.

Related News