தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட ரேவ் பார்ட்டியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாசு என்பவர் பிறந்தநாள் விழாவையொட்டி பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள சொகுசு பண்ணை வீட்டில் பிரமாண்ட ரேவ் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆந்திராவை சேர்ந்த விஐபி-க்கள், நடிகர்கள், நடிகைகள், மாடல் அழகிகள், ஐடி பொறியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement

இதில் உயரக மதுபானங்கள் மட்டுமின்றி சந்தையில் உள்ள எம்டிஎம்ஏ மாத்திரைகள், கோகென் போன்ற பலவகையான போதை வசதிகள் பார்ட்டியில் பங்கேற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த பார்ட்டி சட்டவிரோதமாக நடைபெறுவதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிகாலை 3 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் சென்று பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். பார்ட்டியில் இருந்தவர்கள் யாரும் தப்பிக்காத வகையில் அந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார் அனைவரையும் காவலில் எடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த சோதனையில் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் 15க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இந்த பார்ட்டியில் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ. ககனி கோவர்த்தன் ரெட்டியின் கார் பாஸ் ஓட்டப்பட்டிருந்த பென்ஸ் கார் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த ஐதராபாத்தை சேர்ந்த வாசு தனி விமானம் மூலமாக விஐபி-க்கள் மற்றும் அழகிகளை அழைத்து கொண்டு பெங்களூரு வந்ததாகவும், இந்த ஒரு நாள் இரவு கொண்டாட்டத்திற்காக சுமார் ரூ.50 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நிறைவுபெற்ற பிறகு எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்தான அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படும் என பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News