தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்காளிகளை துன்புறுத்துவதை நிறுத்தாவிடில் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்: பாஜவுக்கு மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா: வங்காளிகளை துன்புறுத்துவதை நிறுத்தா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வௌியாகின. இதை கண்டித்து கொல்கத்தாவில் கொட்டும் மழையில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
Advertisement

அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் மக்களை துன்புறுத்தவும், சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்யவும் ஒன்றிய அரசு செய்தி அனுப்பி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாடு முழுவதும் வங்கமொழி பேசும் மக்களை துன்புறுத்துவதும், தவறாக வழி நடத்துவதும் பாஜ அரசின் கொள்கையாக உள்ளது.

ஒன்றிய பாஜ அரசின் இந்த அணுகுமுறை குறித்து நான் வெட்கப்படுகிறேன், வருத்தப்படுகிறேன். இதுபோன்ற செயல்களை பாஜ உடனே நிறுத்த விட்டால் அரசியல் ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இனிமேல் நானும் வங்கமொழியில் பேச முடிவு செய்துள்ளேன். உங்களால் முடிந்தால் என்னை தடுப்பு முகாம்களில் அடைத்து வையுங்கள்” என எச்சரித்தார்.

Advertisement

Related News