தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம் தாமிரபரணியில் மூழ்கடித்து இளம்பெண் கொலை: கணவன் கைது

அம்பை: அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா (31). டிரைவர். இவரது மனைவி காவேரி (30). ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக செல்லையாவிற்கு மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் காவேரி கோபித்து கொண்டு முக்கூடலில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டார்.

Advertisement

இந்நிலையில் நேற்று முக்கூடலுக்கு சென்ற செல்லையா, மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்தார். பின்னர் நேற்று மாலை இருவரும் அம்பை குருவனம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்லையா மனைவியை அடித்து உதைத்துள்ளார். அவரது தலையை பாறையில் இடித்தார். காவேரி அலறவே, ஆற்றில் அமுக்கி மூழ்கடித்துள்ளார்.

இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு காவேரி உயிரிழந்தார். அப்பகுதிக்கு மக்கள் வருவதற்குள் பைக்கை எடுத்து கொண்டு செல்லையா அம்பை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.பின்னர் தீயணைப்பு வீரர்கள் சென்று காவேரியின் சடலத்தை தேடினர். இரவானதால் தேடுதல் பணியை நிறுத்தினர். இன்று காலை மீண்டும் அவரது உடலை தேடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனிடையே போலீசார் செல்லையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News