தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டுமானத்திற்கு முன் மண், குடிநீர், அஸ்திவார பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: உதவி பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

சென்னை: கட்டுமானத்திற்கு முன்பு மண், குடிநீர், அஸ்திவாரம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகளை அதிக கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும் என உதவிப்பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித்துறை பயிலரங்கில், 16.9.2025 முதல் 25.9.2025 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையில் பணியில் சேர்ந்த உதவிப் பொறியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. பயிற்சி வகுப்புகளுக்கு சென்று அமைச்சர் எ.வ.வேலு, பயிற்சி பெறும் உதவிப் பொறியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: பல துறைகளின் கட்டுமானப் பணிகள், பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயன்பாட்டுத்துறையின் தேவையின் அடிப்படையில் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். பயன்பாட்டுத் துறையுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். உதவிப் பொறியாளர்கள், முதற்கட்ட பணிகளாக, மண் பரிசோதனை, குடிநீர் பரிசோதனை, அஸ்திவாரம் பணிகளின்போது பூச்சி தடுப்பு முறை, கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை, உப்பு நீரை தவிர்த்தல், சாம்பல் நிறத்துடன் சிமென்ட் உள்ளதா என்பதை பரிசோதித்தல், மணல் தூசி துரும்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல், கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் துரு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல், செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுதல் அனைத்து பணிகளும் வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரம் அடிப்படையில் பணி நடப்பதை உறுதி செய்தல், பணிகளில் ஒப்பந்ததாரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், தொழிலாளர்களை கண்காணித்தல், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல், கட்டுமானத்தின்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க உறுதிசெய்ய பொறுப்புடன் செயல்படுத்துவது அவசியம்.

Advertisement