தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி அருகே குடியிருப்பில் புகுந்த கரடி: நாய்கள் விரட்டியதால் பரபரப்பு

Advertisement

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள எச்பிஎப் குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடியை நாய்கள் விரட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் நாள்தோறும் இரவு நேரங்களில் உலா வரும் கரடிகளால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். சில சமயங்களில் பகல் நேரங்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து விடுகின்றன. நேற்று ஊட்டி அருகே உள்ள எச்பிஎப் பகுதியில் குடியிருப்பு அருகே ஒரு கரடி பகல் நேரத்தில் உலா வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் சத்தம் போட்டு கரடியை விரட்ட துவங்கினர். அப்போது, சில நாய்கள் கரடியை விரட்டிச் சென்றன.

இதனால், அந்தக் கரடி குடியிருப்பு பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்தது. நாய்கள் கரடியை விரட்டிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், எச்பிஎப் பகுதியில் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வரும் கரடி மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement