தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் அருகே கதவை உடைத்து பள்ளியில் புகுந்த கரடி

*பீரோவை தள்ளிவிட்டு அட்டகாசம்

Advertisement

குன்னூர் : குன்னூர் அருகே பள்ளி கதவை உடைத்து கரடி அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நான்சச் குடியிருப்பு பகுதியில் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளது. வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்கு கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நுழைந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி கதவை உடைத்து ஒரு கரடி உள்ளே நுழைந்தது. பின்னர் பள்ளியின் அலுவலக அறையில் உள்ள பீரோவை தள்ளிவிட்ட கரடி, பீரோவில் அடுக்கி வைத்திருந்த புத்தக பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.

கரடி, பள்ளியில் புகுந்தது நேற்று காலையில் பொதுமக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வன ஊழியர்கள், கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டு, தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் தங்கள் பகுதியில் அதிகரித்துள்ளதாகவும், பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடி அச்சத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கரடிகளை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Related News