தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு 10ம் தேதி வரை மழை நீடிக்கும்

சென்னை: வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் 10ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலை கொண்டு இருப்பதால் ஆந்திராவில் பலத்த மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்பு பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
Advertisement

இந்நிலையில், வங்கக் கடலில் வடக்கு ஆந்திரப் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில்8ம் தேதி வரை வீசும், மேலும், தெற்கு- மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 65 கிமீவேகத்தில் சூறாவளிக்காற்று வீசும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளிக்காற்று 55 கிமீவேகத்தில் வீசும் அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Advertisement

Related News