வங்கக்கடலில் 2 காற்று சுழற்சிகள்: நாளை முதல் தமிழ்நாட்டில் மழை
சென்னை: வங்கக் கடல் பகுதியில் 2 காற்று சுழற்சிகள் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் அதி கனமழை பெய்யும் என்பதால் துறை முகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்படும் வாய்ப்பும் உள்ளது. தற்போது அரபிக் கடல் பகுதியில் உள்ள காற்றழுத்தம் வட மேற்கு காற்றை கட்டுப்படுத்தி வைத்திருப்பதால், அது வங்கக் கடல் நோக்கி பயணிக்கும் என்பதால் அக்டோபர் 2ம் தேதி விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், சேலம், கல்வராயன் மலைப்பகுதி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்யும்.
அதிகாலையில் கடலோரப் பகுதியில் மழை பெய்யும், 3ம் தேதியில் திண்டுக்கல், ஈரோடு, கோவை வடக்கு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை- பெங்களூரு இடைப்பட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். 4ம் தேதி தென் மாவட்டங்களில் மழை பெய்யும். 5ம் தேதி இது மேலும் பரவலாகும். 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை வெப்பச் சலன மழை பெய்யும்.