வங்கக் கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement
வங்கக் கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும். மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. முன்னதாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் சற்று வேகம் குறைந்தது. சென்னையில் இருந்து 770 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் கடலில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் மசூலிப்பட்டினம் கலிங்கபட்டினம் இடையே | நாளை மறுநாள் மோன்தா புயல் கரையை கடக்கும்.
Advertisement