தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தெடந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்படை விட 6% குறைவாக பெய்துள்ளது. பருவமழை காலத்தில் இயல்பாக 311 மி.மீ மழை பொழியும் நிலையில் தற்போது வரை 293.9 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 23% குறைவாக பெய்துள்ளது. பருவமழை காலத்தில் இயல்பாக 562.4 மி.மீ மழை பொழியும் நிலையில் தற்போது வரை 431.6 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாலுமுக்கு 11 செ.மீ., காக்காச்சி, மாஞ்சோலையில் தலா 9 செ.மீ., மைலாடியில் 7 செ.மீ., சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா 6 செ.மீ., லால்பேட்டை, பாபநாசத்தில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Advertisement

Related News