தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 நாட்களுக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி!

 

Advertisement

தென்காசி: 10 நாட்களுக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க கடந்த 16ம் தேதி முதல் தடை அமலில் இருந்த நிலையில், தற்போது நீக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 16ம் தேதி முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனிடைய கடந்த 20ம் தேதி அதிகாலை ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி கரைகள் கடுமையாக சேதம் அடைந்தன. அருவியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும், தரைத்தளமும் வெள்ளத்தினால் சேதம் அடைந்தது. இதனால் வெள்ளப்பெருக்கு குறைந்தாலும் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

ஐந்தருவி, புலி அருவிகளில் வழக்கம் போல் குளிக்க அனுமதிக்கப்பட்டது. கடந்து இரு நாட்களாக மெயின் அருவி கரையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்ததால் தற்போது அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் அங்கு குளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News