தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடரும் வெள்ளப்பெருக்கால் 4வது நாளாக சுருளி அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Advertisement

கம்பம்: சுருளி அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கால் 4வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இந்த அருவி சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்குவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் கடந்த 26ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தடை விதித்தனர். அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கால் 4வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து கிழக்கு வனச்சரக ரேஞ்சர் பிச்சைமணி கூறுகையில், ‘அதிக நீர்வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இதனால், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்’ என்றார்.

Advertisement

Related News