தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளித்தலை பஸ் நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக அலையும் தெருநாய்கள்

*நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Advertisement

குளித்தலை : குளித்தலை பஸ் நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக அலையும் தெருநாய்கள் நகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்தவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் முக்கிய பகுதியாக மேம்படுத்தப்பட்ட நகராட்சி பேருந்து நிலையம் உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் தினந்தோறும் திருச்சி, கரூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்தும் தரகம்பட்டி மார்க்கெட்டில் இருந்தும் நாமக்கல், சேலம், பெரம்பலூர், முசிறி மார்க்கத்தில் இருந்தும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மினி பேருந்துகள் ஏராளமாக சென்றுவருகின்றன. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதி மக்கள் சொந்த வேலை காரணமாக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து காவேரி நகருக்கு செல்லும் வழியில் அனைத்து அரசு அலுவலகங்களும் தனியார் மருத்துவமனைகளும் வணிக நிறுவனங்கள் கடைகள் ஏராளமாக உள்ளன. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில் சமீப காலமாக குளித்தலை நகராட்சியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலை கடந்து மக்களை அச்சுறுத்துகின்றன. ஒரு சில நேரங்களில் குழந்தைகள் பெரியவர்கள் தடுமாறி கீழே விழும் நிலையும ஏற்படுகிறது.

மேலும் தெரு நாய்கள் கடித்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் இருந்து பொதுமக்களை விடுபட நகராட்சி முழுவதும் சுற்றி திரியும்தெரு நாய்களை கட்டுப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement