குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று இரண்டாவது நாளாக நீடிப்பு
08:32 AM Aug 16, 2025 IST
தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்றும் நீடிக்கிறது.