பரோடா வங்கியில் 2700 அப்ரன்டிஸ்கள்
பயிற்சி: அப்ரன்டிஸ்.
மொத்த காலியிடங்கள்: 2,700. இதில் தமிழ்நாட்டிற்கு 159 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. (பொது-59, பொருளாதார பிற்பட்டோர்-14, ஒபிசி-51, எஸ்சி-33, எஸ்டி-2) உதவித் தொகை: மாதம் ரூ. 15 ஆயிரம்.
வயது வரம்பு: 11.11.2025 தேதியன்று 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி யினர்கள்/ மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.800/-. மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.400/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு கட்டணம் கிடையாது.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மைய விவரங்கள் இ.மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பொது அறிவு, நிதி அறிவு, குவாண்டிடெட்டிவ் அப்டிடியூட், ரீசனிங் அப்டிடியூட், கம்ப்யூட்டர் அறிவு, பொது ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, விருதுநகர், திருப்பூர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, சேலம், சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலுள்ள பரோடா வங்கி கிளைகளில் பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது கல்வித்தகுதி பற்றிய விவரங்களை www.nats.education.gov.in அல்லது www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் bankofbaroda.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2025.