தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பர்கூரில் விவசாய நிலத்திற்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை நாசம் செய்த ஒற்றை காட்டு யானை

*போராடி விரட்டிய மலைவாழ் மக்கள்

Advertisement

அந்தியூர் : பர்கூர் மலைப்பகுதியில் விவசாய நிலத்துக்குள் புகுந்து மக்காச்சோளம் பயிர்களை நாசம் செய்த ஒற்றை காட்டு யானையை மலைவாழ் மக்கள் விடிய, விடிய போராடி விரட்டினர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கர்நாடக எல்லையோர கிராமமான குட்டையூர் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை அங்குள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் மற்றும் ராகி பயிர்களை சாப்பிட்டும் காலால் மிதித்து சேதப்படுத்தியது.

இதனைக் கண்ட அப்பகுதி மலைவாழ்மக்கள் சத்தம் போட்டும், டார்ச் லைட் அடித்தும், பட்டாசுகளை வெடித்து விடிய விடிய விரட்டி அடித்தனர். மேலும், அருகே உள்ள கிராமங்களான வேலம்பட்டி மற்றும் மட்டி மரத்தல்லி கிராமங்களிலும் இந்த யானை அட்டகாசம் செய்து வருகிறது.

தட்டக்கரை வனத்துறையினர் அங்கிருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் யானை ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. எனவே, வனப்பகுதியோர கிராமத்திற்குள் யானை புகாத வண்ணம் அகழி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement