தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

“சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று சகலரும் கொண்டாடுவீர்".. பாரதியார் பிறந்தநாளுக்கு வைரமுத்து கவிதை!

சென்னை: மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரதியார் பிறந்தநாளையொட்டி இன்று, கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார். வைரமுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:

Advertisement

ஒரு மகாகவி ஜனிப்பது

சதைவழிப்பட்ட

புழைவழியல்ல

காலம்

தன்னை யுகம்செய்துகொள்ள

ஒருவனைத்

தட்டித் தட்டித் தயாரிக்கிறது

அவனை

வறுமையால் ஆசீர்வதிக்கிறது

சனாதனத்தின்மீது மீசைவைக்கிறது

நூற்றாண்டுப் புழுக்கத்தில்

நுரையீரைலைப் பட்டினியிடுகிறது

சாப்பாட்டைப் பறித்து

சாம்ராஜ்யத்தோடு

சண்டையிடச் செய்கிறது

முக்காலம் இருள்செய்து

மூளைக்குள் சூரியன் வைக்கிறது

ராஜசபைகளில் மொழிபயிற்றிப்

பாமரவெளியில் பாடச்செய்கிறது

ஏதேனுமொரு தீயில்

இட்டு இட்டுச்

சுட்டுச் சுட்டுத்

தங்கம்தான் என்று

சான்றளிக்கிறது

தெருவைத் திரட்டி

அவமதிக்கச் செய்கிறது

தேசத்தையே கூட்டி

அஞ்சலிக்கச் சொல்கிறது

ஆயுளைப் பறிக்கிறது

புகழைத் திணிக்கிறது

மண்ணுக்குள் புதைத்து

மகாகவி ஆக்குகிறது

அவன்

அக்கிரகாரத்தான் என்றுசிலர்

அலட்சியம் செய்யாதீர்;

சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று

சகலரும் கொண்டாடுவீர்

வாழ்க பாரதி!

Advertisement

Related News