தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாராக மாறும் நிழற்குடை

*பொதுமக்கள் அவதி
Advertisement

குன்னூர் : குன்னூர் அருகே நிழற்குடையில் சமூக விரோத செயல்கள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான வண்ணாரப்பேட்டை செல்லும் சாலையில் நிழற்குடை உள்ளது.

குறிப்பாக குன்னூர் நகர மக்கள், உயிரிழந்தவர்களின் உடலை அப்பகுதியில் அடக்கம் செய்வது வழக்கம். இதனை கருதி மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏதுவாக அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

குன்னூர் அரசு மருத்துவமனை பிணவறையின் கீழ்புறம் இந்த நிழற்குடை உள்ளது. சாலையோரத்தில் உள்ள இந்த நிழற்குடைக்குள் வாகனங்களில் வரும் சில நபர்கள் பகல் நேரங்களிலேயே மது அருந்துவது உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால், அந்த சாலையில் பெண்கள் பெரும் அச்சத்துடன் நடந்து செல்வதாக புகார்கள் தெரிவிக்கின்றனர். சில போதை ஆசாமிகள் சாலையில் செல்லும் நபர்களை கிண்டல் செய்வதும், வயது முதிர்ந்தோர்களை தடியால் அடிப்பதும் போன்ற வன்முறைகள் அதிகரித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள நிழற்குடைக்குள் மது அருந்தும் நபர்களை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News