கல்லூரி வளாகத்தில் சாதிய அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!
12:46 PM Jul 10, 2025 IST
Share
கல்லூரி வளாகத்தில் சாதிய அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மீறினால் காவல்துறை, கல்வித்துறை தரப்பில் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம். சாதி, மதம் என அனுமதிக்கப்படாத நிகழ்வில் மாணவர்களை எந்த கல்லூரியில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது.